அதிர்ச்சி சம்பவம்…திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!


அதிர்ச்சி சம்பவம்…திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!


சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிகொலை  செய்யப்பட்டுள்ளார்.பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,பேருந்து நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எஸ்பிளனமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சௌந்தரராஜன் வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog