ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு?
ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு?
ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆறு எம்.பி.,க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. குதிரைப் பேரத்தைத் தவிர்க்க, சுமுக முடிவெடுக்கும் மன நிலையில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இருப்பதாக தெரிகிறது.
தி.மு.க.,வில், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார்; அ.தி.மு.க.,வில், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம், அடுத்த மாதம் 29ம் தேதி முடிகிறது.அதையொட்டி காலியாகும் ஆறு எம்.பி., பதவி களுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.
அதன்படி அ.தி.மு.க., இரண்டு எம்.பி.,க் களைப் பெற, பா.ஜ., அல்லது பா.ம.க., ஆதரவுதேவை. தி.மு.க., தரப்பில் நான்கு எம்.பி.,க்களை பெற, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் ஆதரவு தேவை. தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., நான்கு பதவிகளுக்கும், அ.தி.மு.க., இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட வாய்ப்புள்ளது. அதன்படி, இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தினால், ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்வது உறுதியாகி விடும்.அதற்கு பதிலாக, தி.மு.க., ஐந்து இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தினால், ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்;
குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். பா.ம.க., ஆதரவை பெறவும், காங்கிரசில் சிலரை இழுக்கவும், அ.தி.மு.க., முயற்சிக்கும். அதற்கு போட்டியாக, அ.தி.மு.க.,வில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை அணி மாறி ஓட்டளிக்க, ஆளும் தரப்பில் பேரம் பேசப்படலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்து, தேர்தலை சுமுகமாக நடத்த, தி.மு.க., விரும்புவதால், ஆறு எம்.பி.,க்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் என, ஆளும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.பா.ம.க., ஆதரவு யாருக்கு?
Comments
Post a Comment